தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ சீனிவாசன், கவுன்சிலர் அரவிந்த் மற்றும்  அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் அவை தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புகைப்படத்தை மாஸ்காக அணிந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட மாநகர செயலாளருமான மனோகரன் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் சாரு பாலா தொண்டைமான் ஆகியோர் தலைமையில் எம் ஜி ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சின்னமா பேரவை நிறுவன தலைவரும், மாநில மக்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினருமான ஒத்தக்கடை செந்தில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்