தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுபடி , திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol 1 Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று 06.10.22 ந்தேதி காலை 0800 மணிக்கு தொடங்கி நடைபெற்றது .

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் , திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் , காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 20 காவல்துறை உயரதிகாரிகள் மத்திய மண்டல அளவில் கலந்து கொண்டார்கள் . திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்கண்ட போட்டிகளில் 5.56 INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு , போட்டியில் பங்கு பெற்று 25 அதிகாரிகளுக் கிடையேயான முதல் பரிசு பெற்றார் .

மேலும் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்ததில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் 2 ம் இடத்தை பிடித்தார் . மேலும் கண்டோன்மெணட் காவல் சரக உதவி ஆணையர் அவர்கள் 9mm பிஸ்டல் சுடுதல் போட்டியில் 3 ம் இடத்தை பிடித்தார்கள் . மேலும் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்ததில் கண்டோன்மெணட் சரக உதவி ஆணையர் அவர்கள 3 ம் இடத்தை பிடித்தார்கள் . இத்துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *