தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று மாலை திருச்சி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் ,

கல்லணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற காவலர்.

மாநகராட்சி மேயர் அன்பழகன், தஞ்சாவூர் மேயர் ராமநாதன், மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், காவேரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *