கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது இதன் காரணமாக தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வினை ஏற்படுத்தி நாளை முதல் பேருந்து சேவை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தூய்மைப்படுத்தும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய பேருந்தில் கடந்த சில வாரங்களாக மீன் சந்தை இயங்கி வந்த நிலையில் இன்று மாநகராட்சி பணியாளர்கள் ஆட்டோ ஸ்பிரே மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தூய்மைப் படுத்தினர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் வளாகத்தை சுற்றி அடைக்கப்பட்டிருந்த கடைகள் பழக்கடைகள் உள்ளிட்டவற்றை உரிமையாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *