திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு இவரது மனைவி சாந்தி இவர்களின் மகளான துர்கா தேவி வயது (18) நர்சிங் முடித்துள்ளார். உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் இருந்து புறப்பட்டவர் வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. உடனடியாக இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் துர்காதேவி கிடைக்காததால் பதற்றமடைந்த பெற்றோர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரைப் பெற்றுக் கொண்ட உறையூர் போலீசார் தனியார் மருத்துவமனையில் நர்சிங் மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் நர்சிங் மாணவி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காட்சி மட்டும் பதிவாகியுள்ளது. மேற்கொண்டு அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்