திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் கிளாரியான் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்ற தமிழக துணை முதல்வரும் திமுக கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாடல் வெளியீட்டு நிகழ்விற்கு திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளரும் மண்டலம் 3 தலைவருமான மதிவாணன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளிகல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தமிழக துணை முதல்வரும், திமுக கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாடலை வெளியிட்டார். இந்த பாடலை திமுக கழக தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வரவேற்புரை மாநகர அவை தலைவர் நூர்கான் மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன், பொன் செல்லையா, சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக மாநகர பொருளாளர் தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் சேகரன் சபியுல்லா கவிஞர்சல்மா மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட மாநகர அணி அமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.