திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனை பிரம்மாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் மற்றும் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை சில்வர் லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி ஜி.செந்தில்குமார், இயக்குனர் ஜி.ஹேமலதா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்
