பிரகாஷ் நகரில் வீடுபுகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலிச் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் கடந்த 14ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து ஐந்தரை பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருச்சி எஸ்பி மூர்த்தி உத்தரவின்பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர்கள் ஹரிஹரன் , இன்பஅணி, விஜயகுமார், அருள்மொழிவர்மன், நல்லேந்திரன், குணா, ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குற்றப்பிரிவு போலீசார் மஞ்சத்தில் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொட்டப்பட்டு வைத்திருந்த ஹரிபிரசாத் என்பதும், வீடுபுகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் இவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து ஹரி பிரசாத் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து ஐந்தரை பவுன் தாலிச் செயின் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.வழக்கில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *