Latest News

மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:- திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒளிருூட்டப் படும் லைட்டுகளை இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்:- திருச்சியில் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் அரசு பள்ளி கட்டிடம் – திறந்து வைத்த அமைச்சர்கள் K.N. நேரு, அன்பில் மகேஷ்:- கலைஞரின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சி உக்கிர மாகாளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி…

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மானிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் அதிமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மாணிக்க…

திருச்சியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த – எம்பி துரை வைகோ:-

திருச்சி காஜாமலை பகுதியில் மத்திய சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது இந்த சேமிப்பு கிடங்கு சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த கிடங்கில் 19 லட்சத்து 50 ஆயிரம் ரேசன் அரிசி மூட்டைகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது இந்த கிடங்கில்…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை செய்து, தங்கத்தேர் இழுத்தனர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் அம்மா பேரவை சார்பில் திருச்சி உறையூர் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் அம்மா பேரவை…

இருண்ட கால அதிமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு தி.மு.க ஆட்சி விடியலை தந்துள்ளது – திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:-

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்டி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பஞ்சப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு 55,000 பேருக்கு…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 12.5 கிலோ கஞ்சா பறிமுதல்:-

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக குருவாயூர் செல்லும் அதிவிரைவு வண்டியில் (16127) ரயில்வே இருப்புப் பாதை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா ,ரேஷன்…

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெண்கல சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க 2009ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பாலக்கரை ரவுண்டானா பகுதியில், 2011ஆம் ஆண்டு 9 அடி…

திருச்சி துவாக்குடியில் 56.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்:-.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக துவாக்குடி அரசு பாலிடெக்னிக்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் முழு விவரம்:-

சென்னையிலிருந்து திருச்சிக்கு நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஏற்பாட்டில் உற்சாக…

மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் திருச்சி தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது:-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று மாலை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அப்துல் சமத் தலைமையில் திருச்சி…

நடிகர் சிவாஜி கணேசன் சிலை புத்தூருக்கு இடமாற்றம் – திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி ,விஜயலட்சுமி கண்ணன்,…

திருச்சி பெரிய வடவூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை முன்னாள் திமுக பகுதி செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்: –

திருச்சி தில்லைநகர் பெரிய வடவூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லைநகர் நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் அன்னதான விழா தில்லை நகர் 10-வது கிராஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.…

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் பாகிஸ்தானை கண்டித்து பாஜக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக…

திருச்சி மாநகர் மாவட்ட தவெக மகளிர் அணி சார்பாக குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயற்குழு உறுப்பினர் கல்பனா நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ் திரைப்பட நடிகருமான தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா அவர்களின் முன்னிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர்…

தமிழகம் முழுவதும் வருகிற மே 23ம் தேதி லாரிகளை இயக்காமல் தொடர் காத்திருப்பு போராட்டம் – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு:-

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ராக்போர்ட் ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் இராசாமணி…

தற்போதைய செய்திகள்