திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார்.

 

விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன் முன்னிலையில் மூதாட்டிக்கு இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

திருச்சி பூவாளூர் லால்குடி பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் சிக்கியவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் இறந்துள்ளார்.

இறந்த நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் திருச்சி லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய காவலர் வினோத்குமார் முன்னிலையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி இருந்த ஆண் நபருக்கு இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *