தேசிய ஜனநாயக கூட்டணிகள் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்

அதன் ஒரு பகுதியாக இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சி விமான நிலையம் வந்து இங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் சிதம்பரம், கரூர், விருதுநகர் சென்று பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை திருச்சிக்கு வருகை தந்த அவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகன பேரணி சென்று பொதுமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே பாஜக தேசியத் தலைவர் ஜே பி நாட்டார் பேசுகையில்:- கூட்டத்தினரை பார்த்து மத்திய அரசுக்கு ஆதரவளிப்பீர்களா…. குக்கர் சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா… திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினை புறக்கணிப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டு கொண்டார்.முன்னதாக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் வருகையையொட்டி மாநகர காவல் துறை சார்பில் 100க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *