திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை அபகரித்து விற்பனை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்துல் ஹக்கீம் என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

 கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் அரசு புறம்போக்கு ரயில்வே காலியிடம் மற்றும் மயானம் ஆகியவற்றின் இடங்களை அரியமங்கலம் பகுதியில் உள்ள அஞ்சுமனே இமாயத்தே இஸ்லாம் என்ற அறக்கட்டளை நிர்வாகமும், ஷாஜகான் என்பவரும் சேர்ந்து அஞ்சுமன் நகர் என்ற பெயரில் அரசு நிலத்தை அபகரித்து அதனை மனைகளாக பிரித்து அப்பாவி பொதுமக்களிடம் விற்பனை செய்து உள்ளனர்.

இந்நிலையில் மனைகளை வாங்கிய பொதுமக்களுக்கு இது அரசு இடம் என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து வாங்கிய அரசு நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அரசு புறம்போக்கு ரயில்வே காலியிடம் மற்றும் மயானம் ஆகிய இடங்களை அபகரிப்பு அதனை மனைகளாக பிரித்து விற்பனை செய்த அஞ்சுமனே இமாயத்தே இஸ்லாம் என்ற அறக்கட்டளை நிர்வாகத்தையும், அரியமங்கலத்தை சேர்ந்த ஷாஜகான் ஆகியோர் மீது வழக்கு பதிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் மனுவை அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *