தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று காலை திருவெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செந்தணீர்புரம் மாரியம்மன் கோவில் முன்பு வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாநகர் வள்ளுவர் நகர் பிச்சை நகர் அரியமங்கலம் பகுதிக்குட்பட்ட உக்கடம் வழியாக அம்மா குளம் பாலமுருகன் கோவில் எஸ் ஐ டி பள்ளிவாசல் தெரு ஆயில் மில் ரோடு மிலிட்டரி காலனி மேல கல்கண்டார் கோட்டை ஆலத்தூர் நத்தமாடிப்பட்டி பொன்னேரிபுரம் பொன்மலை பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *