வருடம் தோறும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை நினைவு கூறும் வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, இந்திய குழந்தைகள் மருத்துவ குழுமம் ஆகியவை இணைந்து ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை கொண்டாடியது.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு நீலவண்ண பலூன்களை பறக்கவிட்டார். முன்னதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், ஒருங்கிணைப்பாளர் ஜான்சி, பிரவீனா மற்றும் ஆட்டிஸம் பாதித்த சிறப்பு பள்ளியில் இருந்து 150க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் பள்ளி சிறப்பு ஆசிரியர்கள், இந்தியா மருத்துவக் குழுமத்தின் மருத்துவர் மேகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *