கொரோனா காலத்தில் ஊரடங்கின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகிறார்கள் இதன் காரணமாக அனைத்து மாணவர்களிடமும் தற்போதைய சூழ்நிலையில் கைபேசி வந்துவிட்டது. அதனால் மாணவர்கள் அதிகநேரம் கைபேசியில் ஃப்ரீ பையர் போன்ற அபாயகரமான ஆன்லைன் கேம்களை விளையாடி வருகிறார்கள்.

இதனால் மாணவர்கள் மத்தியில் சமூக விரோத எண்ணங்கள் தலை தூக்கி படிப்பில் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற சமூக விரோத ஆன்லைன் கேம்களை தடைசெய்ய இளைஞர்களை நல்வழிப்படுத்துவது அரசின் கடமை. எனவே இதுபோன்ற சமூக விரோத ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *