திருச்சி திருவானைக்கோவில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பரத கலைஞர்கள், கர்நாடக இசை கலைஞர்கள் , புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து “போ சம்போ” பாடலுக்கு இசை அமைத்து உலக சாதனை நிகழ்த்தினார்

இந்த சாதனையை விரிக்ஷ புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அங்கீகரித்து பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கியது.

இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N. நேரு, பத்ம ஶ்ரீ கலைமாமணி டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் , கலைமாமணி ரேவதி முத்துசாமி, ஜெம்பகா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை மீனா சுரேஷ், மற்றும் மகாசக்தி பெண்கள் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *