தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு காலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்டு தொழிலாளர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேர வேலை என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த வெற்றியுடன் தொழிலாளர்களின் போராட்டம் முடியவில்லை.
1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக தொழிலார்கள் போராடினர். அப்போதுதான் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது. தொடர் போராட்டத்தால் 1890ஆம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றது.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *