கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் சாலைகளில் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சி மேலப்புதூர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்கள் எதிரே இருசக்கர வாகனத்தில் பேத்தியுடன் வந்த முதியவர் மீது மோதியதில் முதியவர் மற்றும் சிறுமி படுகாயம் அடைந்தனர். அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என்பதற்காக தான் போலீசார் இரவு பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இப்படி பொதுமக்கள் பொறுப்பில்லாமல் சாலைகளில் சுற்று வருகின்றனர் அதிலும் இன்று அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று வாலிபர்கள் மோதியதில் சிறுமியின் முகம், கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டும், முதியோருக்கு தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது தான் மிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்