திருச்சி லால்குடி அருகே தன்னை திருமணம் செய்வதாக பழகிய பின் திருமணம் செய்யமால் ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது பாதிக்கப்பட்ட இளம் பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் , கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.

லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகள் கலைவாணி (25). இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விடுதியில் தங்கி கல்வி பயின்றுள்ளார். குலத்தெய்வம் கோயிலுக்கு சென்ற போது , அதே பகுதியில் உள்ள நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (32) நண்பராக பழகினார். அப்போது எனக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாகவும், போனில் இருவரும் பேசிதால் நட்பு காதலாக மாறியது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்க், சினிமா தியேட்டர் போன்ற பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தோம். அப்போது வேலையில்லாமல் இருந்த நிலையில் தற்போது கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். தற்போது திருமணம் செய்ய மறுத்து வருவதாக லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலைவாணி கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *