தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் என இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 25 வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26 வது வார்டில் மருமகள் சித்ரேஸ்வரி போட்டியிட்டனர். இதில் பேபி காளிராஜ் ஏற்கனவே இருமுறை வார்டு கவுன்சிலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மருமகள் சித்ரேஸ்வரி முதல் முறையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும். இதையடுத்து வெற்றி பெற்ற 2 பேருக்கும் பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்