தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதியுடன் உத்தரவு முடிவடைகிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்