திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள ஆல்பர்ட் மார்சல் ஆர் சி நர்சரி பள்ளியில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் ஐஸ் கட்டி மீது கார் வீல் முறையில் 300 மீட்டர் தூரம் டைவ் அடித்து சென்ற நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் அனிருத் மற்றும் இதேபோல் பனிக்கட்டி மீது 300 மீட்டர் தூரம் ரவுண்ட் ஆஃப் முறையில் டைவ் அடித்த ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஜமீல் இப்ரான் ஆகியோர்

சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் நீலமேகம் என்கிற நிம்லன் மற்றும் மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புதிய சாதனையை நடத்தி காட்டினர். தொடர்ந்து இந்த புதிய சாதனை படைத்த மாணவர்களுக்கு தொழில் அதிபர் அலெக்ஸ் ராஜா சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் ஆண்டனி லெனின் செய்திருந்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *