திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி மைதிலி இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில் மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் சிவகுமாருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சிவக்குமாரை அதே ஊரை சேர்ந்த இருவர் கட்டையால் தாக்கியதில் தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்தபடி மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்டதும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

உடனடியாக அவரது மனைவி மைதிலி மற்றும் உறவினர்கள் படுகாயம் அடைந்த சிவக்குமாரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிவக்குமாரின் மனைவி மைதிலி புகார் அளித்தார். அந்தப் புகாரில் அதே பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் பெயரையும், பிரபல ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழில் அதிபர் ஆகியோரின் தூண்டுதலின் காரணமாக இதே ஊரை சேர்ந்த சிலர் என் கணவரை கட்டையால் அடித்து கொலை செய்ததாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் புகாரில் சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்