திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது . அதன்படி திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘ கிலா டீ கடை , சங்கிலியாண்டபுரம் . அருகில் நடந்து சென்ற ஒருவரை வழிமறித்து எதிரி விஜய் வயது ( 24 ) என்பவர் கத்தியை காட்டி ரூ -500 / – பணத்தை பறித்து சென்றுவிட்டதாக பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி விஜய் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . மேலும் எதிரி விஜய் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது . எனவே , மேற்படி எதிரி விஜய் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால் , அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குற்றவாளி விஜய் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதேபோல் திருச்சி மாநகரம் , கண்டோன்மென்ட் காவல் நிலைய ல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா அருகில் நடந்து சென்ற‌ வாலிபரை வழிமறித்து குற்றவாளி ஜெகதீஷ் வயது ( 23 ) என்பவர் கத்தியை காட்டி கைப்பேசி மற்றும் ரூ -500 / – பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , வழக்கின் வழக்கின் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . எதிரி ஜெகதீஷ் என்பவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாலும் , தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால் , அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குற்றவாளி ஜெகதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிகள் விஜய் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணையை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள் . திருச்சி மாநகரில் கடந்த 2020 – ம் ஆண்டு 40 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . நடப்பு 2021 – ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்