அனைத்திந்திய செட்டியார் பேரவையின் மாநில, மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் புகழேந்தி செட்டியார் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேரவையின் மூன்றாம் ஆண்டு மாநில மாநாடு சென்னையில் நடத்துவது, குலத்தொழிலை அங்கீகாரம் செய்யும் வகையில் தனியாக நலவாரியம் அமைக்க முதல்வருக்கு வலியுறுத்துவது சமுதாயத்தில் படித்த இளைஞர்களுக்கு மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்துவது, அனைத்து ஊர்களிலும் செட்டியார் பாரம்பரிய அங்காடிகளை உருவாக்குவது,

மேலும் குமுளியில் உள்ள கண்டதேவி மலையில் இருக்கும் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவிலை மீட்டெடுத்து கூடலூர், புளியங்குடியில் இருந்து கோவில் வரை பாதையை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கணேஷ்குமார், மல்லேஸ்வரம் குமார், ஆனந்த்செட்டியார், ரக்ஷன்ரமேஷ், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *