திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. இதை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஏற்பாட்டு செய்திருந்த இந்த போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டியில் 10 வயது முதல் 60 – வயது வரை உள்ள சிறுவர்கள் சிறுமியர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஒட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடங்கி எதுமலை சாலை, துறையூர் சாலை, புதிய பைபாஸ் சாலை வழியாக திருச்சி சட்டமன்ற அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

5- கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த ஒட்டபோட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்த வீரருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த வீரரூக்கு எட்டாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் ,மூன்றாவது இடத்தை பிடித்த வீரருக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் ஒட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச் செல்வன் என்கிற ரேஷன் கடை மாற்றுத்திறனாளி ஊழியர் கலந்து கொண்டு ஓடினார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.பி. இளங்கோவன்,துணை சேர்மன் செந்தில் மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்