தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் சத்தியவாணி தலைமையில் திருச்சி மத்திய நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக கடந்த தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவு ஊழியர் மூலமாக அமல்படுத்திட வேண்டும்,

பலமுறை ஊதியம், ஓய்வூதியம், பனி கொடை காலி பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த தர்ணாவில் சத்துணவு பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைதலைவர் பெரியசாமி கூறுகையில்..,

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தினை அமல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், இருப்பினும் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தினை விரிவு படுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலமாக இதனை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தை நடத்துகின்றோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *