திருச்சி செந்தணீர்புரம் வ உ சி தெரு பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ் இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் வயது 34 ‌‌ மனைவியை பிரிந்தவர். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி பலரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை வில்சன் ஆண்ட்ரூஸ் குடிபோதையில் வீட்டில் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தந்தை அற்புதராஜ் அவரது வீட்டில் உள்ள தனி அறையில் வில்சன் ஆண்ட்ரூஸின் கைகளையும் கால்களையும் நைலான் கயிற்றால் கட்டி வைத்தார். மேலும் மப்ளர் கொண்டு கழுத்தை இறுக்கியும் மகன் சாகாததால் தனது வீட்டில் உள்ள சமையலறையில் இருந்த கத்தியால் தனது மகனின் கழுத்தில் பல முறை குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து அருகில் குடியிருந்தவர்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை செய்த தந்தை அற்புதராஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தந்தையே மகனை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *