திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்ஜி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையறிந்த அவரது ஆதரவாளரான சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதி வடக்கு தெருவை சேர்ந்த வடிவேல் மகன் சுரேஷ்குமார் (வயது 30) என்பவர் ராம்ஜி நகர் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். கே.ஜி.எப் திரைப்படம் போல் காவல்நிலையம் தகர்த்து எரியப்படும் என்று அவரது செல்போன் வாட்ஸ்ஆப்பில் ராம்ஜி நகர் போலீசாரை அச்சுறுத்தும் வகையில் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்து அவர் மீது அச்சுறுத்தல் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 3 ல் ஆஜர் படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *