தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் நிலையங்களில் கிருமிநாசினியை கால் மூலம் இயக்கி கைகளை சுத்தம் செய்யும் 50 கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரத்தில் 20 கிருமிநாசினிகளும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 8 கிருமி நாசினிகளும், கும்பகோணம், மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் 7 கிருமி நாசினிகளும் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 8 கிருமி நாசினி கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கவும், ரயில் நிலையத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ரயில்வே ஊழியர்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கால் மூலம் இயங்கும் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்யும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *