திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் ஆயினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது விடுமுறை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 30-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் மேற்கண்ட விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்