திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி காட்டூர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் நகர் குடியிருப்போர் சங்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1975-ம் ஆண்டு இந்த சங்கத்திற்கு 11 சென்ட் நிலத்தை நன்கொடையாக ராஜ்கமல் செட்டியார் மிராஸ் கணேஷ் செட்டியார் ஆகியோர் வழங்கினார்கள். அதில் 36 மனைகளாக பிரிக்கப்பட்டு இந்த மனையில் பிளாட் எண் 1 மற்றும் 18 ஆகிய இரண்டு பிளாட்களை மட்டும் இனம் சாசனமாக பாப்பா குறிச்சி அப்போதைய பஞ்சாயத்து தலைவர் வேணுகோபால் அய்யர் கேட்டுக் கொண்டதன் படி அப்போது சமுதாய கூடம் கட்டி பொதுமக்களிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மழையின் காரணமாகவும் பல வருடம் ஆகியதாலும் தற்போது சமுதாயக்கூடம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

அதனை சரிசெய்ய தரக்கோரி மாவட்ட ஆட்சியருக்கும், ஆதிதிராவிடர் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். அதற்கு அவர்கள் நிதி ஒதுக்கி தருவதாக உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும் இந்த இடத்தில் மருத்துவ கட்டிடம் கட்ட போவதாக தெரிவித்துள்ளனர். இதை அறிந்த நாங்கள் எங்களுடைய சமுதாயக் கூடத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் மறு சீரமைத்து கட்டி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு சமுதாயக்கூடம் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *