திருச்சி ஜி கார்னர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் கேகே நகர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து. அப்பகுதியை சேர்ந்த சிலரின் உதவியுடன் சேர்ந்து போலீசார் சாக்கடையிலிருந்து அரை நிர்வாணத்துடன் கிடந்த உடலை மீட்டு ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த உடல் அருகே பாதி நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம் உள்ளது இந்த கட்டிடத்தின் உள்ளே மது பாட்டில்கள், ஆணுறைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவது தெரிய வந்தது. மேலும் இறந்த நபர் யார் என்றும் வயது 40 முதல் 50 வயது இருக்கலாம் எனவும் முதற்கட்ட போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் இறந்தாரா என கேகே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்