கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளார். இதில் மளிகை கடை, காய்கறி கடைகள் உள்ளிட்ட பிற கடைகளுக்கு காலை முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அதற்கு மேல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ஆங்காங்கே போலீசார் பேரிக்கார்டுகள் கொண்டு அடைந்துள்ளனர். இதன் வழியாக இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளனர். மேலும் இந்த ஊரடங்கில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *