திருச்சியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள், வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து கொண்டே போகிறது சாதாரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர் சாலைகளில் நடந்தோ, அல்லது வாகனங்களில் செல்லவோ முடியவில்லை. அதுவும் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை தற்போது வரை எடுக்கப்படவில்லை. மேலும் பீட்டா அமைப்பு தெரு நாய்களை பிடிப்பதயும் கொள்வதையும் எதிர்த்து கோர்டில் தடை வாங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு 28/05/2021 திருச்சி உறையூர் பாக்குப்பேட்டையில் பட்ட பகலில் சாதாரணமாக நடந்து சென்ற ஒரு சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்து குதறும் CCTV வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுவனின் பரிதாப நிலையை பார்த்தாவது உடனடியாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *