பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது. இந்த மாநாடு பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்சல் கான் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சபியுல்லா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.மற்றும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் தொகுத்து வழங்கினார். இந்த மாநாட்டில் அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு எஸ் டி பி ஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் பைஜி மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் யாஸ்மின் ஆகியோர் வாழ்த்துரை. வழங்கினார்கள், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி மற்றும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தமிழ் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ ஆகியோர் சிறப்புறையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் மாநில தலைவர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் அதனைத் தொடர்ந்து. பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மேற்கு மாநகர தலைவர் ஜீபேர், திருவெறும்பூர் பகுதி தலைவர் முகமது அலி, திருவெறும்பூர் பகுதி செயலாளர் லால் பாட்ஷா ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.

திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியான கோட்டை ரயில் நிலையம் அருகில் இருக்கும் ( ஹிஜ்ரி 116 ) கி.பி 734 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பள்ளிவாசலான மக்கா மஸ்ஜித் .மற்றும் கி.பி 1736 ஆம் ஆண்டு திருச்சி டவுண்ஹால் மலைகோட்டை அருகில் சவுக்கு பள்ளிவாசல் நிறுவப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம்களின் வணக்கம் தலங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருச்சி மாவட்ட சுற்றுலாத்துறை இணையத்தளங்களில் புகைப்படங்கள் இடம்பெற செய்வதற்கு, திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதேபோல் சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த கேரளா மாநிலத்தை சார்ந்த மாப்பிள்ளாமார்கள் முஸ்லீம்களை வெள்ளையர்கள் கைது செய்து சரக்கு ரயிலில் அடைத்து கொண்டு செல்லும்போது திருச்சியில் உயிர் நீத்த உடல்களை அடக்கம் செய்த திருச்சி காஜாமலை அடக்கஸ்தலத்தையும் மற்றும் சுதந்திரத்திற்காக போராடி திருச்சியில் உயிர் நீத்த சந்தா சாஹிப் சுதந்திர போராட்ட தியாகி அவர்களுக்கும் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் எனவும்,

திருச்சி மாநகராட்சி மேற்கொள்ளும் சீர் மிகுநகரம் என்ற பெயரிலும், மாநகராட்சியின் புதிய பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணியில், ஆங்காங்கே சாலைகளை தோண்டியதன் விளைவாக திருச்சி மாநகர் முழுவதும் சாலைகள் மிகமோசமாக குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் செல்லும் பொழுது கண்களில் மண்புழுதி மற்றும் தூசிகள் படிவதால், நோயாளிகள் பெரியவர்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிற காரணத்தினால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலை பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும், திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரியமங்கலம் திடீர் நகரில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் துர்நாற்றங்களும், அவ்வப்பொழுது தீ விபத்து ஏற்பட்டு புகைமண்டலமாக மாறி சுவாசிக்க முடியாதவாறு அங்குள்ள பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு மாநகர நிர்வாத்தை மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற பொதுக் கூட்டத்தின் வாயிலாக திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

இறுதியாக திருச்சி கிழக்கு மாநகர பகுதி தலைவர் அப்துல்லா நன்றியுரையற்றினர்.. இந்த மாநாட்டு பொதுக்கூட்டத்திள் ஜமாத்தார்கள், பொதுமக்கள், ஆண்களும், பெண்களும் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *