திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்சலாம் இவரது மனைவி கைருன் நிஷா இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 5-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான அப்துல் சலாம் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக போதிய வருமானமின்றி கடன் சுமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை கட்ட முடியாமல் தவித்து வந்த நிலையில் ஆரோக்கியராஜ் அப்துல் சலாமிடம் உனது ஐந்தாவது குழந்தையை என்னிடம் கொடுத்து விடு அதற்கு பதிலாக உனது கடனை அடைத்து விட்டு மேலும் கூடுதலாக 75 ஆயிரம் பணம் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து தனது ஆண் குழந்தையை அவரிடம் விற்றுவிட்டார். இதுகுறித்து அப்துல் சலாமிடம் அவரது மனைவி கைருன் நிஷா குழந்தை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அப்துல் சலாம் குழந்தை பற்றிய எந்த தகவலும் மனைவிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கைருன் நிஷா உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அப்துல் சலாம் தனது பெற்ற மகனை சூதாட்டத்தில் அதிகரித்த கடனை அடைப்பதற்காக ஆரோக்கியராஜ் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை அப்துல் சலாம் மற்றும் இருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூதாட்டத்திற்காக பெற்ற மகனை விற்ற தந்தையால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *