திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவில் ரியாஸ், பாலா மற்றும் முருகேஷ் ஆகியோருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல வேலை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தனர் .

மேலும் கடையில் இருந்த 50ஆயிரம் மதிப்பிலான 19 செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருடு போனதை கண்டு உடனடியாக பாலக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் அருகிள் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள செல்போன் கடையில் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *