மதுரையில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா வயது 35. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் வீடியோ பதிவிட்டு வந்தார். இவரது காதலர் சிக்கந்தர்ஷா வயது 45 இவர்கள் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஒரு இளம்பெண் நடத்தி வரும் நிகழ்ச்சி குறித்தும் அந்த பெண் குறித்தும் தகாத முறையில் விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரையில் தலைமறைவாக இருந்த ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர்ஷாவை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர். அதன்படியில் ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். தற்போது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *