தமிழக திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடியாக நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன் இவர் ரசிகர்களால் (இடுப்பழகி) என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையும் நடிகையுமான மறைந்த மோனல் குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “நீ இப்பொது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு” என பதிவிட்டுள்ளார். மோனல் தமிழ் சினிமாவிற்கு பார்வை ஒன்றே போதும் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2002 ஆம் ஆண்டு மோனல் சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *