கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி கொள்வதாக தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த 31ஆம் தேதி வரை அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்தின் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை சுயவிருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்