நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை பிப்ரவரி 17 காலை 10 மணி முதல் மதுக்கடைகள் மற்றும் பார்கள் வருகிற 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *