திருச்சி துறையூரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று துறையூர் நகர் பகுதியில் உள்ள 30க்கும் அதிகமான கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது மனிகண்டன் என்பவரின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மனிகண்டன் வேறு எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை வைத்துள்ளாரா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவரின் வீடு மற்றும் மற்ற இடங்களில் சோதனை செய்தபோது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான்மசாலா,புகையிலை குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட அலுவலர் ரமேஷ்பாபு உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த கடையை மூடி சீல் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *