திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப் பயிற்சி, நடனம், இசை, யோகா, தற்காப்பு பயிற்சியுடன், ஸ்மார்ட் வகுப்பறை உடன் தனியார் பள்ளியிற்கு இணையாக தரம் உயர்த்த வேண்டுமென்றும். எங்கள் பள்ளியில் விவசாய மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் அதிகம் பேர் பயின்று வருவதாகவும். மேலும் கடந்த 2018 – 2019 ல் நடந்த கிராமசபையில் தீர்மானம் இயற்றிய தீர்மான எண்களை கோடிட்டி கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாட்களில் பள்ளியில் சிறப்பு கலை இலக்கிய போட்டிகள் நடத்தி மாவட்ட மாநில அளவில் பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதிய அனுப்பி உள்ளார்.

மேலும் அரசுப் பள்ளியில் பயின்று ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி சிவம், உள்பட பல ஆட்சியர், ஆசிரியர் . மருத்துவர் மற்றும் பல உயர்ந்த பதவியை அடைந்துள்ளனர் . என்று தன்னுடைய (அரசு ) பள்ளியின் பெருமையை பறைசாற்றி பதாகை வைத்து உள்ளார். தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய கொப்பம்பட்டி மாணவன் மகாபதஞ்சலியை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநில ஆலோசகர் நீலமேகம் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்