திருச்சிக்கு வருகை தரும் திமுக கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை தொகுதிகளை சார்ந்த மாநில – மாவட்ட, ஒன்றிய பகுதி, நகர பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய பகுதி, நகர பேரூர் கழக நிர்வாகிகள், கழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் அனைவரும் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், 05.05.2022 நாளை காலை 11.30 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரில் சந்திப்பில் உற்சாக வரவேற்ப்பு அளிக்க இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *