மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்த படி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் காணப்பட்ட கார்த்திக் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தாய் இறந்த சோகத்தில் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *