தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் திருச்சி காஜா பேட்டை பகுதியில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்த திமுக தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யததை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக, ஆனால் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் போகிற கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க திமுக அரசை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து, கண்டன கோஷங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், அது யாரா வது வார்டு செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *