சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 217வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர செவந்திலிங்கம், மண்டல குழு தலைவர் துர்காதேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி 56-வது திமுக வட்ட செயலாளர் PRB பாலசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *