தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 23’ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அன்பில் அறக்கட்டளையிலிருந்து ரூ.3.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் விடிவெள்ளி முதியோர் இல்லம் பார்வையற்றோர் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கே.என் சேகரன் மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *