திருச்சி புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத் வயது 23 திருச்சி சமயபுரம் அருகே உள்ள எம்ஏஎம் பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஷேன் பானு இவர்கள் இருவரும் இன்று மாலை வினோத்தின் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கி லால்குடி தட்ச்சஞ்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த பொழுது

சாலையில் அதிவேகமாக வந்த லால்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளரின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் வினோத் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த கல்லூரி மாணவி பானு தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம் வந்த கீரனூர் போலீசார் மாணவர் வினோத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி லால்குடி தட்சங்குறிச்சி அருகே அதிவேகமாக வந்த நெடுஞ்சாலைத்துறை அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *